மரத்தை உசுப்பினார்கள்,
பழங்களுக்காக,
இலைகள் பறந்தன,
கிளைகள் முறிந்தன,
கொப்புகள் வீழ்ந்தன,
பறந்த இலைகள் சருகாகின,
முறிந்த கிளைகள்விறகாகின,
வீழ்ந்த கொப்புகள் முட்டுக்கம்புகளாயின,
ஆனாலும்,
உசுப்பியவன் உசும்பவில்லை,
பழங்களோ பகிர்ந்து கொள்ளபட்டுவிட்டன,
மரமோ அடுத்த அறுவடைக்கால உசுப்பலுக்காக.....?