Translate

Pages

Monday, March 18, 2013

உசுப்பிய மரம்!





மரத்தை உசுப்பினார்கள்,
பழங்களுக்காக,
இலைகள் பறந்தன,
கிளைகள் முறிந்தன,
கொப்புகள் வீழ்ந்தன,

பறந்த இலைகள் சருகாகின,
முறிந்த கிளைகள்விறகாகின,
வீழ்ந்த கொப்புகள் முட்டுக்கம்புகளாயின,
ஆனாலும்,
உசுப்பியவன் உசும்பவில்லை,

பழங்களோ பகிர்ந்து கொள்ளபட்டுவிட்டன,
மரமோ அடுத்த அறுவடைக்கால உசுப்பலுக்காக.....?