கிழிக்க நினைத்ததோ தென்கிழக்கை
கிழிந்து போனதோ கீலம் கீலம்!
அத்துறைக்கப்பலொரு அரக்கனினாட்சி
சதுறயிலுமொரு சிற்றரசாட்சி
கல்துறையிலோ பாவம் தூங்குமாட்சி!
முகவெற்றிலையென முழங்கியவூரின்
அகத்தினிலிலோ பிளவுகளாயிரம்!
துருவத்திசைகளின் மருதூரார்கள்,
பிரிவினை வேண்டி பிரயத்தனிக்கிரார்கள்!
வோட்டுக்காய் செய்யும் வெளிவேசம்
வேண்டாமே இந்த வேற்றுமை கோஷம்!