Translate

Pages

Tuesday, October 17, 2023

மேட்டுக்குடி நியாயம்

 



வாழ்ந்து வந்தவன் வெளியேறி ஓடட்டும் 

வாழ வந்தவன் வாழ வேண்டும் 


மனித உரிமைகள் மதிப்பற்று போகட்டும் 

மனித மிருகங்கள் வாழ வேண்டும்


உலக நியதிகள் உடைந்து சிதறட்டும்

கலக கயவர்கள் வாழ வேண்டும்


பச்சிளம் பாலகர் பசியோடு தவிக்கட்டும்

பஞ்ச பாதகர் வாழ வேண்டும்


சொந்த நாட்டவர் அகதியா அலையட்டும்

வந்தேறு வஞ்சகர் வாழ வேண்டும் 


சொந்த கிறிஸ்தவரும் நொந்து வாடட்டும்

அந்த மதத்தவர் வாழ வேண்டும்


மனிதாபிமானம் மடிந்து தொலையட்டும்

அநியாய ஆக்கிரமிப்பாளன் வாழ வேண்டும்


மேற்குலக வாதம்

மேட்டுக்குடி நியாயம்

Monday, May 29, 2023

 

ஆள் பிரித்து கள்ளன் பொலிஸ் நண்பர் ஆட்டம்
ஆளுக்கொரு பக்கம் சப்போட்டர் மக்கள் கூட்டம்
தோள்மேல் கைபோட்டு கலைந்தது நண்பர் தேட்டம்
மீளாத பகையில் பிரஞ்சி போனது வோட்டர் நாட்டம்

வீடும் திருமணமும்

 திருமணத்திற்கான தகுதியை பெற பெண் ஒருத்தி வீடு ஒன்றை கொண்டிருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆக்கப்பட்டிருகிது. சமுகத்தில் புரையோடி போயுள்ள நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வினை. தீர்வு "பூனைக்கு மணி கட்டுவது யார்?" என்பதிலேயே தங்கியுள்ளது என்று சொல்லி விட முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மணி கட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றனர். பிரச்சினை புரையோடிப் போனது. இறுக்கமான முடிச்சு, வெட்டி எறிந்து விட முடியாதது. கயிறு அறுந்து கட்டமைப்பு வீழ்ந்து விடும் நிலை. முடிச்சு கழுத்தை இறுக்குகிது, நிதானமாக அவிழ்க்கப்பட வேண்டும், அவசரப்பட முடியாது.

இந்த பிரச்சினையில், பெண்ணை பொறுத்தவரையில் திருமணம் முடிக்கும் வரையில் தான் தலைமேல் பிரச்சினை. ஆணைப் பொறுத்த வரையில், சகோதரனாக, தந்தையாக, மாமாவாக, பெரிய/ சிறிய தந்தையாக, பாட்டனாக என பல படிகளில் தலையாய கடமை ஆக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பிரச்சினை ஆக்கப்படுவதற்கு பிரதான பின்னணி பெண்களே என்பது கசப்பான உண்மை.
பிரச்சினை, பெண்ணின் வீட்டில் ஆண் வாழ்வது அல்ல, மாறாக பெண்ணின் வீடு திருமணத்திற்கான நிபந்தனையாக ஆக்கப்பட்டிருப்பதே. அனந்தரமாகவோ, தன் உழைப்பினாலோ, அல்லது வேறு வழிகளாலோ பெண் சொத்துக்களை கொண்டிருப்பது இயல்பு. மனைவியின் சொத்துக்களை அவளது அனுமதியுடன் அனுபவிப்பதுவும், பரிபாலனம் செய்வதுவும் தப்பாக இருக்க முடியாது. அவளது மரணத்தின் பின் அவனுக்கும் பாகம் உண்டு என்பதுவும் நியதி. முதலில் பெண்ணின் வீட்டில் வாழ்வது குறித்த தப்பபிப்பிராயம் களையப்பட வேண்டும்.
திருமணத்திற்கான நிபந்தனையாக பெண்ணின் வீடு நிர்ணயம் செய்யப்படுவதால் சமூக, பொருளாதார, ஆன்மீக பிரச்சினைகளை தமக்கு தாமே விதித்து வினையாக்கி கொண்டுள்ளது சமுதாயம்.
பெற்றோருக்கு நியம வாரிசு ஆண்மகன். வயோதிப பெற்றோரை போசித்து பராமரிக்கும் கடமையும் உரிமையும் அவனையே சாரும். அவனது ஊழைப்பில் வாழும் உரிமை பெற்றோருக்கு உரியது. ஆனால், பெண் வீட்டில் வாழ நிர்ப்பந்திக்க படும் அவன் பெற்றோரை தமது நிழலின் கீழ் கொண்டு வருவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. வேறொரு ஆணின் பராமரிற்குள் தள்ளப்படும் பெற்றோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். வாழ்நாள் முழுவதும் சேர்த்த அனைத்தையும் வேறொரு ஆணிடம் பறி கொடுத்து தான் கட்டிய வீட்டுக்குள் ஒரு மூலையில் ஒதுங்கி வாழும் துரதிஷ்டம் நமக்கு நாமே விதித்துக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
உடன் பிறந்த சகோதரிகளுக்கு மாடமாளிகைகள் கட்டிய ஆண்மகன், தனக்கென ஒரு குடிசையையாவது கட்டிக்கொள்ள முடியாமல் போன துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
தனக்கென, தான் திருப்திபட்டுக் கொள்ளும் வகையில், தனது உழைப்பிற்கு ஏற்றாற் போல் அளவான வீடொன்றினை அமைத்து உரிய காலத்தில் வாழ்கையை ஏற்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பத்தினை சிதைத்து, யார் யாரையோ திருப்தி படுத்த வேண்டி தேவையை தாண்டிய அநாவசிய அலங்கார வீடுகளுக்காக உழைத்து தேய்ந்து போகும் துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட சடங்கு சிக்கலின் வினை.
ஊரில் அடுக்கு மாளிகைகளில் புறாக்களுக்கும் சிலந்திகளுக்கும் வாழிட வசதி செய்து, வெளிநாடுகளில் ஆறு சுவர்களுக்குள் அடைக்கலம் தேடும் துரதிஷ்டம் நமக்கு நாமே ஏற்படுத்திக் சடங்கு சிக்கலின் வினை.
கடமைகளை விஞ்சி சடங்குகளிற்கு முன்னுரிமை கொடுக்கும் சமுதாயம் கடமைக்கும் சடங்கிற்கும் வித்தியாசத்தினை விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடமை என்பது இவ்வாறு தான் என படைத்தவனால் விதிக்கப்பட்டது. அது ஈருலக ஈடேற்றம் தரக்கூடியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அது அவனுக்கு நான் அடிமை என்பதை வெளிப்படுத்துதாக அமைகிறது. அதாவது, அவனது கட்டளையை அப்படியே அடியொற்றி கடைப்பிடிப்பது வணக்கம்.
சில வேளைகளில் கடமையுள் முகஸ்துதியும் பெருமையும் கலக்கும் போது சடங்காக ஆகுவதுண்டு. அந்த அமல்களை முகத்தில் சுருட்டி வீசுவதாக இறைவன் கூறுகிறான்.
கட்டளையிடப்படாத ஆனால் நாம் நற்காரியம் என கருதும் செயல்கள் கூட கடமையாக கருதப்படும் போது, அதாவது "நான் அவனுக்கு அடிமை" என்ற நிலையியை கேள்விக்குள்ளாக்க கூடியது. அதையே இஸ்லாம் பித்அத் எனும் வழிகேடு என வரையறுக்கின்றது.
கடமைகளுக்கும், நல்லவை என நாம் கருதுபவற்றிற்குமே இந்த நிலை என்றால், சமுதாயத்திற்கு பயந்து அமல்களுக்கு மேலான இடத்தில் வைத்து நாம் அரங்கேற்றும் சீர்கேட்டு சடங்குகள் குறித்து பேச தேவையில்லை.
ஆகவே, இந்த வீட்டு பிரச்சினை உட்பட்ட கடமைகளை தாண்டி நாம் முன்னுரிமை கொடுக்கும் அனைத்து சடங்குகளில் இருந்தும் சமுதாயம் என்ற ரீதியில் நாம் விடுபட வேண்டும். அதன் மூலம் நாம் நமக்கே விதித்து கொண்ட ஆன்மீக, பொருளாதார, சமூக சிக்கல்களில் இருந்து விடுபட வல்ல நாயன் நேர்வழி காட்டட்டும்.

Tuesday, May 23, 2023

கல்மனத்தாய்



உம்மவுக்கு ஆபத்தாம்
ஊரறிய பிரச்சாரம்
சும்மா கிடந்த சங்கை கூதி
சூர் என பூ சுத்துகிறார்

அண்டையான் செய்த சூனியமாம்
எண்டயான் என்றைக்கும் தீர்க்காத சதி
தொண்டயில தொக்கி நிக்காம் உம்மவுக்கு
தொண்டர் படை புனைகிறார் செய்தி

ஐசீயில் இருந்த உம்மா
அடுத்த வாட்டுக்கு வந்திருக்காம்
நைசாக கதை வளர்க்கார்
நாளைய வாக்கை எண்ணி

பிணக்கு பிணி இணக்கும்
வைத்தியராம் புரக்டர் மாரு
இணக்கம் வந்து விட்டால்
உழைப்புக்கு வழியேது புரட்டருக்கு

சங்கூதும் நாளுக்காக
சந்தியார் காத்திருக்கார்
வோட்டுக்கு வந்திராதிங்க
வார்த்தைகள் வாய் நிறய

கட்டிலில் படுக்க வெச்சி
கதவயிம் பூட்டி வெச்சி
கயவராளும் நிலமையாச்சி
#கல்மனத்தாய் நிலைக்கட்டும் உன் மூச்சி



Monday, March 27, 2023

பெற்றார்

 ஆரைப்பிடித்தும் அடியை நிறுத்தி

வேரைக்கொடுத்து கிளையை காக்கும்

ஆலை போலாம் அன்பு பெற்றார்




Thursday, March 16, 2023

என்ன பாவம் செய்தார்?

 



என்ன பாவம் செய்தார்

இந்த ஏழை வயோதிபர் உமக்கு?
உழைப்பினை உறிஞ்சி தானே
ஊர் போற்ற பட்டம் பெற்றீர்!
திளைத்திடும் களிப்பு வாழ்வில்
விளைத்திட்டார் சிறு கீறலென
திரண்டனர் மூர்க்கம் கொண்டே
திக்கற்று தவிக்குது சனம்
என்ன பாவம் செய்தார்
இந்த ஏழை வயோதிபர் உமக்கு?
வலியின் விளையுள்
வருமே மறுமை வரையும்
வருகின்ற வினாவிற்கு
விடை சொல்ல துணை வருமா?

Wednesday, December 14, 2022

தேயாதே செருப்பே





மாஜரின் பூசிய பாண் கொண்ட பிளாஸ்டிக் பெட்டி, சூட்கேஸ், புழுதி படியாத சாப்பாத்து என ஆடம்பரமாக வாகனத்தில் பாடசாலை வந்து இறங்கும் மாணவனைப் பார்த்து இதெல்லாம் எட்டாத்தூரம் என மனதை தேற்றிக்கொள்ளும் அளவிற்கு பக்குவப்பட்டிருந்த எண்பதுகளின் முற்பகுதி.

 டவுனுக்கு போகும் யாராவது ஒருவரின் சைக்கிளில் தொற்றிக்கொள்ளும் அரிய ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர அனேகமாக நடைதான். நடப்பதற்கு, பாடசாலைக்கு, விளையாட்டிற்கு, வைபவங்களுக்கு என விதவிதமாக சப்பாத்துகளும் பாதணிகளும் என மாற்றி மாற்றி அனுபவிக்கும் இந்தக்கால பிள்ளைகள் போலன்றி எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒன்றே ஒன்று 'பாட்டா' என அறியப்பட்ட இரப்பர் சிலிப்பர் தான். அதுவும் தேய்ந்தது, அறுந்தது என நினைத்த மாத்திரத்தில் வாங்கி மாற்றி விடவும் முடியாது. வாங்குவதற்கு முன் பல வேண்டுதல்கள் வைக்கப்பட வேண்டியிருந்த காலம் அரச அலுவலகத்தில் பொருட்கொள்வனவு செய்வதாட்டம். 

கிடைத்ததினை வைத்து உச்ச பயனை பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கான பக்குவமும் எம்மிடம் இருந்தது. பாட்டாவின் கீழ்ப்படை வீதியோடும் மேற்படை பாதத்தோடும் போராடி நடுப்படையை பாதுகாப்பதில் மிக மிக கரிசனை காட்ட வேண்டியிருந்தது. நடுப்படை தாண்டி ஒளிப்படை புகுந்தாலும் சலிப்படைந்து விடாது இன்னும் சிலகாலம் பாவித்து விடலாம் என்பதில் உறுதிபட இருப்பது என்பது எமது அடிப்படை கொள்கை. 

தேய்ந்து விடாது காப்பதில் பல வகையான அணுகுமுறைகள் இருந்தன. நடையை குறைப்பதற்கு உண்டான வழிமுறைகள் அதில் ஒன்று. தெரிந்தவரின் பைசிக்கிளில் தொற்றிக்கொள்வது, வாகனங்களின் பின்னால் குறிப்பாக ட்ரெக்டர் பெட்டியின் பின்னால் தொற்றிக்கொள்வது என அடுக்கலாம். நடந்தேயாக வேண்டும் என்ற பல சந்தர்ப்பங்களில் முடிந்தவாறு கையில் தூக்கி ஓடிப்போன சந்தர்ப்பங்களும் உண்டு.

பாட்டாவை பாதுகாக்கும் செயற்பாடுகளின் வரிசையில் மிக முக்கியமான விடயம் கீழ் படைக்கும் வீதிக்கும் இடையிலான தொடுகை தொடர்பை குறைக்கும் வழிகள். முள் உள்ள கனமாக ஒருவகை (புலி நகம்)வித்துக்களை செருப்பின் அடியில் பொருத்திக் கொள்ளும் போது ஓரங்குல உயரமும் டொக் டொக் சப்தமும் ஒருவகை கம்பீர உணர்வை தந்திருக்கும். அத்தோடு எமது அடிப்படை நோக்கம் செருப்பின் அடிப்படையும் தேயாதிருக்கும் என்ற நப்பாசையில் நாம் தேடிய தற்காலிக தீர்வு.

இந்த வரிசையில் ஓரளவு நீண்ட கால நிச்சய தீர்வொன்றும் இருந்தது. வெயிலுக்கு உருகிய வீதியின் தார் படை ஒன்றை பாட்டாவின் அடிப்படையில் பூசிக் கொள்வது. அது வீதி மண்ணுடன் கலந்து ஒருவகை உறுதிப்படையாக நின்று தாங்கும்.

அடியின் ஆயுளை கூட்டிக் கொள்ள என்னதான் பிரயத்தனங்கள் செய்தாலும் பாட்டா பட்டி பொறுமை காத்து ஒத்துழைப்பதில்லை. எந்தவொரு முன் எச்சரிக்கையுமின்றி வாரறுந்து இடைவழியில் கழுத்தறுப்புகள் செய்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அதற்காக வீசிவிட்டு வருமளவு நம் பொருளாதாரம் இடம் தருவதில்லை. அடுத்து, கையில் தூக்கியபடி கங்காரு நடைதான். அது எமக்கு ஒன்றும் புதிதோ முடியாததோ இல்லை. இறுதியில், வாரறுந்த பாட்டா செருப்பு திருத்துனரின் வயிற்றுப் பசிக்கு சோளப்பொரியாக வந்து நிற்கும். எமது இயலாமை அவனது இயலாமைக்கு ஊன்று கோலாக வந்து நிற்பது இறை நியதி. 

என்னதான் பிரயத்தனங்கள் செய்தாலும், கால் விரல்கள் முன்னே அடையாளம் சொருக குதிகாலும் வீதியும் சேர்ந்து செய்யும் விதியின் சதி நடுப்படையையும் துவம்சம் செய்து அவையிரண்டும் முத்தம் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் மூளைக்கு வலி என்ற வடிவில் போக தொடங்கியிருக்கும்.  அந்த நிலை தாண்டியும் அந்த பாட்டாவுடனான உறவு இலகுவில் முடிந்து விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அதை நண்பர்களிடம் காட்டி வெற்றிக்களிப்புடன் பெருமைப்படுவதும் உண்டு. அதிலும் ஒரு கிளுகிளுப்பு உள்ளூரும்.

அப்போதும் கூட அந்த பாட்டாவை இலகுவாக வீசி விடுவதாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் அழி ரப்பராக பாவிக்க முனைந்ததும் உண்டு. கடைசியாக வட்ட வடிவில் வெட்டி விளையாட்டு பொருட்களின் சக்கரமாக மாற்றி விட்டிருப்போம்.

Tuesday, December 13, 2022

புட்போலும் நானும்

 அப்போதிருந்தே புட்போல் மீது நாட்டம் குறைவுதான். புட்போல் விளையாடிய சந்தர்ப்பங்களை எண்ணி சொல்லலாம். அதன் சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாது.

ஒரு தடவை நண்பர்கள் புட்போல் விளையாடிக்கொண்டிருந்த இடத்திற்கு தற்செயலாக செல்ல நேர்ந்தது. ஆள் பற்றாக்குறை காரணமாக நண்பர்களின் வற்புறுத்தலில் களம் இறங்க நேர்ந்தது. எனக்கு தெரிந்தது எல்லாம் எதிரணியின் திசையை நோக்கி பந்தை உதைப்பது தான். கோல் போஸ்ட் அருகே நின்று கொண்டிந்த என்னை நோக்கி பந்து வர அதை நானும் திருப்பி விட " கோ....ல்". உற்சாகம் புட்போல் மீது இனம் புரியாத பற்று, எல்லாம் வந்த வேகத்தில் அதே கணத்தில் பறந்து போயின, "ஓஃப் சைட்" என அந்த அந்த கோல் நிராகரிக்கப்பட்ட போது. "போங்கடா, நீங்களும் உங்க புட்போலும்", என அன்று வெளியேறிய களம் , கடைசிக் களமாகவும் அமைந்து போனது.
என்னதான் நாட்டம் குறைவாக இருந்தாலும் உலகக்கோப்பை என்று வரும் போதெல்லாம் ஒருவகை உற்சாகம் பிறக்கத்தான் செய்யும். தெரிந்ததெல்லாம் ரொனால்டோவும் மெஸ்ஸி யும் தான். நமது பயல்கள் ஆப்கானித்தானிடம் மண்டியிட்ட போது கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் சற்று குறைந்து புட்போல் மீது திரும்பியிருந்தது. சவூதி, மொரோக்கோ, டியூனிசியா, ஜப்பான் போன்ற அணிகலன்கள் பிரகாசித்த போது ஒருவகை உத்வேகம் கலந்த ஆர்வம் பிறந்திருந்தது.
ஆனாலும், ஒன்றரை மணித்தியாலங்கள் ஓடித்திரிந்தும் முடிவுகள் ஒன்றுமேயில்லாமல் போனபோது அந்த ஆர்வம் மங்கத்தொடங்கியிருந்தது. முதலாம் சுற்று முடிந்து நொக்கவுட் சுற்றுகள் தொடங்கிய போது, நிலைமை மேலும் கீழிறங்கி போனது நியாயம் தான். இருபத்தியிரண்டு பேரும் முழு நேரமும் ஓடியும் அததைவிடவும் அந்த ரெபரி ஓடியும் கடைசியில் முடிவு உதைக்கின்ற ஒருவனினதும் பிடிக்கின்ற ஒருவனினதும் கைகளின் மீது மட்டுமே தங்கியிருப்பது சகிக்க முடியாதது.
புட்போல் மீது மீண்டது நாட்மின்மை. "பழைய குருடி கதவைத்திறடி"

 ஆழ்வார் சேர்ப்பாராயின் தனக்கென

வீழ்வார் மாந்தர் மீழாக்குழி

அந்தவாதமும் பிடிவாதமும்

 ''அந்தவாதம்" சிங்களம் அடிப்படைவாதத்திற்கு வழங்கியிருக்கும் சொல். அடிப்படைவாதத்தின் அடிப்படையை பார்த்தால் சிங்களமே சரியாக பெயர் சூட்டியிருக்கிது. கருத்தில் நியாயம் இருக்கிறது என்பதற்காக யதார்த்தத்தை மறுத்து ஓர் அந்தத்தை பிடித்து தொங்கும் அனைத்தும் அந்தவாதமே.

வாகனத்தில் பயணிக்கும் போக்குவரத்து விதிகளை தெய்வ வாக்காக மதிக்கும் ஒருவன், விதியை மீறி விபத்தை தவிர்க்கும் சந்தர்பத்தில் விதிக்காக விபத்தில் மாட்டினால் அவன் அந்தவாதி. இவ்வாறே எது என்னவானாலும் கட்சிமாறாத தொண்டனும் அந்தவாதியே. கல்லானாலும் கணவன் என உடன்கட்டை ஏற்றும் கலாச்சார வெறியும் அந்தவாதம் தான். அந்தவாதத்திற்கு ஏசி ஏசியே ஆட்சியை பிடித்த கேத்தா கூட்டத்தின் சேதனப்பசளை கொள்கையும் அந்தவாதத்தின் வெளிப்பாடே. நபிகளாரை/ அவரது குடும்பத்தினரை/ இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி எழுதுவதற்காக கொல்ல துணிவதுவும் அந்தவாதமே.
இதே போன்று அரசியல், கலாச்சாரம், போருளாதாரம் என எந்த துறையை பார்த்தாலும் அந்தவாதம் இருக்கவே செய்கிறது.
இந்த வரிசையில் மத அந்தவாதம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மதம் சார்ந்த அந்தவாதம் பல சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதமாக மாறி ஒவ்வொரு மதத்தினதும் அடிப்படைகளை தகர்த்தெறிந்து மதங்களை விகாரமடைய செய்திருக்கிறது. சாதாரண மனிதர்களினால் ஆற்ற முடியாத காரியங்களை மத அந்தவாதம் கட்டாயமாக்கி திணிக்கின்றது. அது முடியாத காரியமாகி விடும் நிலையில் அங்கு தான் புரோகிதம் தலையெடுக்கிறது. இறுதியில் புரோகித வேடம் மதங்களை விட்டு மக்களை தூரமாக்கி மதங்களை அனந்தர சொந்தமாக்கி கொண்டது. புரோகிதத்தை விரோதித்த இஸ்லாத்தையும் புரோகிதப்பேய் விட்டபாடில்லை. மௌலானா, ஷேக், பாவா, தங்கல், ஹஜ்ரத் போன்ற பெயர்களில் உலாவும் புரேகித பேர்வழிகள் குறித்து விசேட விளக்கம் தேவையில்லை. ஏனைய மதங்களில் புரோகித தாக்கம் குறித்து இங்கு அளவளாவ விரும்பவில்லை.
அந்தவாதம் என்றாலே மனக்கண் முன் வந்து நிற்பது இஸ்லாம் தான். அந்தளவுக்கு திட்டமிட்ட ஊடக பயங்கரவாதம் செயற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் எந்தவொரு இஸ்லாமிய கோட்பாடுகளும் அந்தங்களில் தொங்கி நிற்பதில்லை. மாறாக எல்லாவற்றிலும் நடைமுறைச் சாத்தியமான நடுநிலை நிலைப்பாட்டையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் அந்த நடுநிலை நிலைப்பாடுகளில் கூட சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விதிவிலக்குகள் அளித்து தளர்வு போக்கை இஸ்லாம் கொண்டுள்ளது. விபத்தை தவிர்க்க விதிகளை மீற அனுமதி அளிக்கிறது. அதுவே இஸ்லாத்தின் அழகு. எந்தவொரு ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி வலியுறுத்துவதில்லை என்பதே இஸ்லாமிய தத்துவம். ஏனைய மதங்களோடு ஒப்பிடுகையில் இஸ்லாமியர்கள் மதக்கடைமைகளில் பேணுதலுடன் இருக்க முடியுமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் எனலாம்.
அப்படியாயின், இஸ்லாமியர் ஏன் அந்தவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்? அதற்கு விடை காண முன் இந்த குற்றச்சாடினை தெரிவிப்பதில் முன்னிற்பவர்கள் யார், அவர்கள் எதை வலியுறுத்துகின்றனர் என்பதை உற்று நோக்கினால் விடை எளிதாக கிடைத்து விடும். அவர்கள் சரி என காண்பதை ஏனைய அனைவரும் சரி காண வேண்டும் எனவும் அதையே கடைப்பிடிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்/ வற்புறுத்துகின்றனர். நடுநிலையோடு சிந்தித்தால் இதுவே ஒருவகை பயங்கரவாதம். அனேகமான இஸ்லாமியர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. இதனைத்தான் இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்கப்படுகிறது. அப்படி இது அந்தவாதம் இல்லாவிட்டால் இதனை எவ்வாறு அழைப்பது? பிடிவாதம் என்று அழைக்கலாமா?
அந்தவாதம்/ அடிப்படைவாதம் என்பது சரியான/ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதாவது அந்தத்தில், இலாப நட்டங்களை கவனத்தில் கொள்ளாது, இருந்து கொண்டிருப்பது. மறுபுறத்தில் பிடிவாதம் என்பது அந்தத்தில் மட்டுமல்ல எந்தப் புள்ளியிலும் நிலையாக நின்று கொண்டு சரி பிழை/ சாதக பாதகம் கவனத்தில் கொள்ளாது ஒற்றைக்காலில் நிற்பது. இஸ்லாம் இதையும் மறுக்கிறது. ஆக, எந்த சூழ்நிலைக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நெகிழ்வு தன்மை கொண்ட பின்பற்றுவதற்கு இலகுவான யாதார்த்தத்தினை அனுசரிக்கும் வகையிலான மனித வாழ்விற்கு ஏதுவான/ நன்மை பயக்கும் விதமான பகுத்தறிவிற்கு உட்பட்ட கோட்பாட்டை நோக்கிய இயல்பாகவே வரும் பிடிப்பு. அதாவது இயல்பான கொள்கை பிடிப்பு.
இது அந்தவாதமும் இல்லை பிடிவாதமும் இல்லை

இம்மையியல்!

 நாளைகளுக்காக இன்றுகள் தொலைக்கப்படுகின்றன!

இன்றுகளால் நாளைகள் தொலைகின்றன!

இறுதியில் இன்றுமில்லை நாளையுமில்லை

Wednesday, November 23, 2022

மிஃராஜ்





1. அஞ்ஞான இருள் கொண்ட 
     அராபிய தேசம்கண்ட 
 விஞ்ஞானமும் வியந்த 
     விண்பயண கதை கேளீர் 
                     **** 
 2. ஈன்ற பிள்ளை பெண்ணாயின் 
    ஈற்றினிலே கொன்றொழித்த தேசம் 
ஈமான் வழியில் ஈருலகம் வென்றிட 
    கோமான் நபி வந்துதித்த காலம்
                    ****
3. போதனைகள் பல செய்தும் 
    பாதகர்கள் கல் நெஞ்சம் 
வேதனைகளுக்கேது பஞ்சம் 
    வேதம் கொணர்ந்த கோமானுக்கு
                **** 
4.  துயரங்கள் துரத்தி வர 
    தூரத்தே நல்லொளி மிளிர 
அயராத உழைப்பினிலே 
    அண்ணலார் திளைத்திருக்க 
                **** 
5. வல்லவன் அல்லாஹ் தன் 
    வல்லமை உணர்த்திக்காட்ட 
நல்லவர் நபிகளாரை 
    நாடினான் விண்பயணத்திற்கு 
                **** 
6. வானவர் ஜிப்ரீலாரும் 
    வாகனம் புறாக்கினோடே 
வானத்திற்கழைத்துச்செல்ல 
    வந்தனர் செய்தியோடு 
            **** 
7. புதையல் நீராம் ஸஸம்மில் 
    புனிதராம் முஹம்மதுவின் 
இதயம் கழற்றி கழுவியே 
    ஈமானும் இல்முவும் புகுத்தினாரே 
                **** 
8. புறாக்கினிலேறி முகத்தஸிற்கு 
    போகும் வழியில் மூஸா-தன் 
கபுறடியில் தொழுதமை கண்டு 
    களித்தே தொடர்ந்தனர் பயணத்தை 
            **** 
9. சுலைமான் தந்த புனித இல்லம் 
    சூழவும் கண்டார் நபிகள் பலரும் 
தலைமை இமாமும் அவரேயானார் 
    தொழுகை நடாத்தி சிறந்தனரே 
            **** 
10. ஆதம் நபியாம் முதலாம் வானில் 
    ஈஸா யஹ்யா இரண்டாம் வானில் 
அழகிய யூசுப் மூன்றாம் வானில் 
    இத்ரீஸ் அலைஹியும் நான்காம் வானில் 
                ****
11. ஐந்தாம் வானில் ஹாறூனும் 
    ஆறாவதாக மூஸா நபியும் 
ஏழாம் வானில் நபி இபுறாஹீமும் 
    அண்ணாலாருக்கு முகமன் கூற 
            **** 
12. ஸலாங்கள் கூறி வரவேற்று 
    சங்கை நபிகள் வானங்களேழில் 
அலைஹிஸ்ஸலாம்கள் அனைவருமே
   அண்ணல் நபியை ஏற்றனரே
             ****
13. தங்க வண்ண பூச்சிகளும் 
    தரத்தில் உயர்ந்த பழரகங்கள்
எங்கும் நிறைந்த முந்தஹாவாம்
  ஏழாம் வானில் நின்றதுவே 
                ****
14. நாளும் எழுபதினாயிரமாம்
  நுழையும் மலக்குகளனைவருமே
மீளனுழையா அதிசயமாம் 
   மஃமூர் பள்ளி சென்றனரே
                 ****
15. மாந்தரேங்கும் சொர்க்கத்து வாசல் 
    மண்ணின் வாசனை கஸ்தூரியாமாம் 
ஏந்தல் நபிகள் நுகர்ந்துணர்ந்தே 
    எமக்குமறிய தந்தனரே 
            **** 
16. இறையை நெருங்க தொழும் வழியாம் 
    இறைஞ்சும் உம்மத் நமக்காக 
மறையை தந்த பேரரசன் 
    மன்றம் சென்று பெற்றனரே 
            **** 
17. ஐம்பது அதிகம் உம் உம்மத் 
    ஐயம் சொன்னார் மூஸாவும் 
ஐந்தே போதும் என்று மனம் 
    அன்னார் திருப்தி கொண்டனரே 
                **** 
18. சான்றுகளெதெற்கு நம்பிவிட 
    சத்தியதூதரின் வார்த்தைகளெமற்கு 
தோன்றிய வர்த்தக கூடமொன்று 
    தோதான சான்றாயிருந்ததுவே 
            **** 
19. தூற்றிய தீயோர் முன்னாலே 
    துளியேயளவும் ஐயமில்லை 
ஏற்றனர் தோழர் அபூபக்கர் 
    ஏந்தினார் 'சித்தீக்' கிரீடமல்லோ 
                **** 
20. நபியிபுறாஹீமின் மையங்கள் 
    இரண்டாம் முகத்தஸ், கஃபாவும் 
நபி முஹமதுவிற்குரித்தே குறித்து 
    நற்செய்தி சொன்னது "மிஃராஜே"

Tuesday, May 24, 2022

நானும் சாதாரண தரமும்

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுறாமாண்டு இலங்கை வரலாற்றை புரட்டிப்போட்ட வருடம். எண்பத்தியேழாம் ஆண்டு ராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தத்தின் படி இந்திய சமாதான படை இலங்கை (IPKF ) வந்திருந்தனர். சமாதானத்திற்கான வந்தவர்கள் சன்டையின் போக்கை மாற்றி விடுதலைப்புலிகளை சக்திமிக்கவர்களாக மாற்றி சென்றிருந்தனர். ஜே ஆரின் பிரதமராக இருந்தாலும் IPKF இன் வருகையை மனதார எதிர்த்த பிரேமதாச தான் ஜனாதிபதியானபின் IPKF ஐ வெளியேற்ற முழு மூச்சாக செயற்படடார். அதன் ஓர் அங்கமாக புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொண்டிருந்தார். அதே வேளை புலிகளை பிளவுபடுத்தி பலவீனம் செய்யும் கைங்கரியமும் அரங்கேற்ற பட்டு கொண்டிருந்தது. மறுபுறத்தில் புலிகளோ IPKF ஐ வெளியேற்றும் தேவையை நிறை வெற்றி கொள்ளும் அதே வேளை தங்களை பலப்படுத்தி அடுத்த நகர்விற்கு தயார்படுத்தி கொள்வதிலும் குறியாக இருந்தனர். இந்த நகர்வுகளுக்கு முத்தாய்ப்பாக 1990.06.11 கல்முனை வெஸ்லியின் இல்ல விளையாட்டு போட்டியின் இரண்டாம் நிகழ்வின் ஓட்டப்போட்டிக்கான 'ஒன் யுவர் மார்க் கெட் செட்' பின்னரான "டப்" சத்தத்திற்கு பதிலாக கல்முனை நகரின் தென் எல்லையில் தொடங்கியது தாக்குதலின் வெடி சத்தம். அதுவே வெஸ்லியுடனான ( Kalmunai Wesley) எனது இறுதி நாளாகவும் அமைந்து போனது. அந்த நாழிகை, இலங்கையின் வரலாற்றையம் புரட்டிப்போட்டிருந்தது. அதன் பின்னர்பல உறவுகளினதும் நட்புகளினதும் இழப்புகள், உடமைகளின் அழிவுகளும் கொள்ளைகளும், நித்திரையிழந்த இரவுகள், உயிருக்கான ஓட்டம் என பல அல்லோல கல்லோலங்களுக்குப்பின் பத்தாம் தர கல்வி அனேகமாக பறிபோன நிலையில் இறுதி தவணையில் கல்முனை ஸாஹிராவில் தஞ்சம் அடைந்திருந்தோம். ஸாஹிராவில் எனது வகுப்பு 10 G (Slr Slr). அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வகுப்பு நவாஸ் (Nawas Mohamed) , மரூசி (Marooz Jamaldeen), அஸ்வத், அஸ்லம் (Aslam S. Moulana) போன்ற பாடசாலையின் பழைய மாணவர் களோடு எம்மைப்போல கல்வியில் அநாதரவாக்கப்பட்ட சிலரும் அந்த வகுப்புக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். தரம் பதினொன்றாகும் போது தரத்தின் அடிப்படையில் 'D' வகுப்பு கலைக்கப்பட்டு நாம் D வகுப்பாக்கப்பட்டிருந்தோம். இந்த அடைவிற்கு பழைய மாணவர்களுடன் புதியவர்களான நாம் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். எது எப்படி இருந்தாலும் பத்தாம் தர இறுதியாண்டு முடிவுகள் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மிக மிகவும் குறைவானதாக இருந்தன. அதன் பின்னர் வந்த டிசம்பர் விடுமுறையில் எமதூரின் அல் அக்ஸா வினால் (Rasmi Jamaludeen)ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் கணித பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றிருந்தேன். இந்த இடத்தில் ஆசிர்களான காசிம் பாவா மற்றும் அஸீஸுல்லாஹ் ஆகியோரின் அர்ப்பணிப்பான கற்பித்தலை நினைவு கூறாமல் இருக்க முடியாது. ஆனாலும் ஏனைய பாடங்களின் தேவை கருதி அந்த வகுப்புகளுக்கு கனத்த மனதுடன் விடை சொல்ல வேண்டியதாயிற்று. பின்னர் ஸாஹிரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக/ மேலதிக வகுப்புகளில் மட்டுமே தங்கிருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அங்கு ஹமீது (கணிதம்), அலியார் (விஞ்ஞானம்) ஆகியோர் உட்பட்ட ஆசிரியர்களினதும் ஷரீப் ( பகுதி தலைவர்) அவர்களினதும் அரும் சேவை மறக்க முடியாதது, மறக்க கூடாதது. தினமும் நற்பிட்டிமுனை யிலிருந்து சாய்ந்தமருது வரையிலும் இரு தடவைகள் காலையிலும் மாலையிலும் பயங்கரவாத சூழ்நிலையில் பல சோதனை சாவடிகள் கடந்து மிதிவண்டியில் சென்று வருவது என்பது இலகுவானதாக இருக்கவில்லை. கொரணாவினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று பரீட்சை எழுதும் மாணவர்கள் குறித்து பேசப்படும் இன்றைய நிலையில், நாம் சந்தித்த சாதாரண தரம் பெயருக்கு ஏற்ப சாதாரணமாக இருக்கவில்லை. அது மிகவும் சிக்லானதும் கடினமானதுமாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

Monday, April 11, 2022

நீங்கள் வாழுங்கள் நாங்கள் செத்துப்போகிறோம்

நீங்கள்!
உங்கள் பதவியை பாதுகாத்து கொள்ளுங்கள் 
ஆட்சியாளரே!
நாங்கள்!
செத்துப்போகிறோம்! 
நீங்கள்!
உங்கள் கட்சியை உயர்த்தி கொள்ளுங்கள்அரசியலாளரே 
நாங்கள்!
செத்துப்போகிறோம்! 
 நீங்கள்!
உங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளுங்கள்
வியாபாரிகளே!
நாங்கள்!
செத்துப்போகிறோம்! 
நீங்கள்!
உங்கள் பணங்களை உண்டியலில் போடுங்கள்
வெளிநாட்டு வதிவாளரே!
நாங்கள்!
செத்துப்போகிறோம்!
நீங்கள்!
உங்கள் வசதிகளை பெருக்கி கொள்ளுங்கள்
அதிகாரிகளே!
நாங்கள்!
செத்துப்போகிறோம்! 
நீங்கள்! உங்கள் நாடுகளை வளர்த்து கொள்ளுங்கள்
வளர் நாட்டினரே!
நாங்கள்!
செத்துப்போகிறோம்! 
 #நீங்கள்_வாழுங்கள்_நாங்கள்_செத்துப்போகிறோம்

Wednesday, March 23, 2022

தொழுகையும் பொறுமையும்

நொறுக்கத்தான் நினைத்தனர் பொறுத்துதான் ஒதுங்கினோம் நொறுங்கியே நொந்தனர் நெருங்கியினி வருவினர் #தொழுகையும்_பொறுமையும்_போதுமான_ஆயுதம் https://www.facebook.com/bishrullah/posts/10209982245268829?comment_id=10209988263659285¬if_id=1648000084217595¬if_t=feed_comment&ref=notif

Saturday, March 12, 2022

புளகாங்கிதம்

புளகாங்கிதம் இருக்கட்டும் பானையோடு பொங்கிவிட்டால் அடுப்பும் அடுத்தவரும் பங்கிற்கு பச்சத்தண்ணிதான் சக்கையாகி மிச்சம் பானையில் உள்ளூரும் பூரிப்பு போதும் சில்லூரி சத்தம் செவிப்பறைக்கு சேதம் #புகழேந்திகளின்_படுகுழி In FB on 12th March 2022

Wednesday, March 9, 2022


ஒவ்வொரு இடியிலும்
இடிந்து வீழ்வோம் என்றா நினைத்தாய்
இன்னுமின்னும் இறுக்கம் பெற்று
உறுதி கொள்கிறோம் புரிவாய்
சதி செய்வதிலேயே உன் சிந்தனைகளெல்லாம்
சீரழிந்து கிடக்க
சிதறிக்கிடந்த எம் ஈமானின் உணர்வுகள்
சீர்பெற்று சிறப்படைந்துது கொண்டுதான் இருக்கின்றன
எம் ஈமானின் சிந்தனைக்கு முன்னே உன்
சாமானிய சிந்தனை ஒரு சாமானா
புரிகின்ற அந்நாளில்
நீயும் எம்மணியின் முன்னணி உறுப்பினராகியிருப்பாய்
இன்ஷா அல்லாஹ்!
ஹிதாயத் உன்னையும் ஒரு நாள் வந்து சேரும்
அது நாள் வரை எம் தியாகங்கள் தொடரும்.......

In FB on 23 Dec 2020

கன்னியும் காவலனும்


Shared with Publ
கன்னியும் காவலனும்
"""""""""""""""""""""""""""""

கனநாளா காத்திருக்காள் கன்னி
கலியாண கனவுகளுடன்
காளையரின்
காதல் தூதும்
கலியாண யோசனையும்
கலைந்து போக
காடையரின்
கல்லெறியும் பொல்லடியும்
மஹரோடு மணவாளர் மலிந்திருக்க
கைநிறைய சீதனத்தை கறந்தெடுத்து
கல்லாக குந்திரிக்கான் காவலுக்கு
காலாகாலமா
சீர்சிறப்பும் செப்பும்
மணநாளும் குறித்திருப்பார்
சீசனுக்கு
சில நாளில்
கும்பகர்ணம் மீளவரும்
சீசனும் முடிந்திருக்கும்
பக்கத்து ஊராரின்
பரிதாபங்களுக்கும்
கர்ச்சிக்கும் காவல் ஜீவன்
உறங்கு நிலை உறவினரோ
செய்வதறியா
கனநாளைய கனவுகளுடன்
கல்மனத்தாள் - கன்னி

In FB on  9 October 2021

 

 கட்டுக்கும் அடங்கா காளை
கட்டவிழ்த்து கொண்டது
குத்தி குதறல்கள் கண்ட இடமெல்லாம்
கத்தி கதறல்கள் கொண்ட பயனில்லை
அடங்கவா போகிறது #காளை





Shared with Public
ஏற்றுவதில் தானே
ஏச்சும்பேச்சும்!
ஏங்கவிட்டு ஏறவிடுது
ஏற்புடையாயிற்று!

In FB on 9 October 2021 

 களவெடுத்து மகிழுகிறார் வேந்தர்

கடனிறுத்து மாழுகிறோம் மாந்தர்

In FB on 20 Oct 2021

 சத்தத்திற்கு தெரியவில்லை அவனது

கட்டத்தின் எல்லைக்குள் அடங்கிவிட
சட்டத்திற்கு முடியவில்லை
சத்தத்தை சாந்தம் செய்ய
கொண்டாடுகிறான் யேசுவை
திண்டாடுகின்றன போதனைகள்
சிலுவை சுமந்த பாவங்கள் பாரியவை
இரு மில்லேனியம் கடந்தும் இன்னும்
ஈசாவின் வழியின் பொறுமையில்
பேசாமல் புரள்கிறேன் தூக்கம் தேடி

In FB on 26 Dec 2021