கைகூப்பி வணங்கியோனே
கண்டுக்காம போகிறாயே
கதவடிக்கே வந்தவனே
கதவடைத்து விரசிறாயே
கனிவுடன் பேசினாயே
கௌரவனாக்கினோமே
இனிவரா தேர்தலென்றாே
இழிவுடன் விலகிப்போகிறாயே
உறவுகள் இழந்தேனே
உனை ஆதரித்ததனாலே
உதவிக்கு நாடினேனே
உதறினாயே ஆரேயிவனென்றே
உன்னெதிரி எனக்குமென்றேன்
எந்நட்பும் வேண்டாமென்றேன்
ஒன்றானீர் அரசமைக்க
என்னுறவோ இன்றுமில்லை.
தொழக்கூட விழித்ததில்லை
விழித்திருந்தேனுன் வெற்றிக்காக
தொழிலொன்று என்றபோது
தொகையெங்கே என்கிறாயே
நாட்டுக்காகவென்றே நின்றேன்
வீட்டுக்கே செய்யாததை செய்தேன்
நோட்டுக்காய் தின்றே நாட்டை
மீண்டும் வருவாய் வோட்டு கேட்டே