பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பாதை விஸ்தரிப்பாம்!
பள்ளிமதில் உடைக்கப்படுகிறது,
பள்ளிக்கு வந்தவரெல்லாம்
பக்குவமாக பார்த்தபடி செல்கிறார்.
பரதேசிகள் இரண்டு,
பாதையோரம் பேசிக்கொள்கின்றன,
"பாரிந்த அநியாயத்தை,
பள்ளிமதிலை உடைக்கிறானுகள்",ஆஹ்,
பக்திமான்கள் பதறுகிறார்கள்?
பள்ளிமதிலென்ன பள்ளியையே உடைத்தாலும்
பரதேசிகளுக்கென்ன கவலை
பள்ளிக்கு போகாதவரை?