முட்டுக்கொடுக்க
முண்டியடிக்க வேண்டியவர்கள்- அவர்கள்
கட்டியணைத்து கனிவு
கொடுப்பாரென்றிருந்தேன்....
பாகப்பிரிவினையில் மோதிக்கொள்ளும்
பெரியண்ணர்கள் - இந்த
பாவப்பட்ட கடைக்குட்டியை....
தட்டிக்கழித்து
எட்டி உதைக்கின்றார்
தட்டிகேட்க நாதியில்லை
தட்டிக்கொடுப்பாரெவருமில்லை.........
சாய்த்திருக்க ஓரமாய்
மருதமர முனையாயினுமில்லை
குடியிருக்க கற்குகையின்
முனையாயினுமில்லை............
பொதுவான பங்குமில்லை
பாகத்திலும் உரிமையில்லை
பக்கத்து ஊட்டானின்
பாதையோரம் படுப்பதற்கோரிடம் தேடி.........
சொந்த பந்தங்கள் பாராமுகங்காட்ட
சொந்தங்காலில் எழுந்து நிற்க
சிந்தனை செய்து நிற்கும்
சின்னத்தம்பி
நமுனையூரான்.........