Translate

Pages

Wednesday, October 2, 2019

நாளும் நாலுவேளையும்

காகம் கரைகிறது
கனவு கலைகிறது
கருமை விலகிறது
காலையாகியது

வெயிலும் எறிகிறது
வியர்த்து வழிகிறது
பற்றி எரிகிறது
பகலும் ஆகியது

வானம் சிவக்கிறது
வனப்பாயிருக்கிறது
மனமும் மகிழ்கிறது
மாலையாகியது

நாளும் நகர்கிறது
நித்திரை அழைக்கிறது
இருளும் சூழ்கிறது
இரவு ஆகியது.