அராபிய தேசம்கண்ட
விஞ்ஞானமும் வியந்த
விண்பயண கதை கேளீர்
****
2. ஈன்ற பிள்ளை பெண்ணாயின்
ஈற்றினிலே கொன்றொழித்த தேசம்
ஈமான் வழியில் ஈருலகம் வென்றிட
கோமான் நபி வந்துதித்த காலம்
****
3. போதனைகள் பல செய்தும்
பாதகர்கள் கல் நெஞ்சம்
வேதனைகளுக்கேது பஞ்சம்
வேதம் கொணர்ந்த கோமானுக்கு
****
4. துயரங்கள் துரத்தி வர
தூரத்தே நல்லொளி மிளிர
அயராத உழைப்பினிலே
அண்ணலார் திளைத்திருக்க
****
5. வல்லவன் அல்லாஹ் தன்
வல்லமை உணர்த்திக்காட்ட
நல்லவர் நபிகளாரை
நாடினான் விண்பயணத்திற்கு
****
6. வானவர் ஜிப்ரீலாரும்
வாகனம் புறாக்கினோடே
வானத்திற்கழைத்துச்செல்ல
வந்தனர் செய்தியோடு
****
7. புதையல் நீராம் ஸஸம்மில்
புனிதராம் முஹம்மதுவின்
இதயம் கழற்றி கழுவியே
ஈமானும் இல்முவும் புகுத்தினாரே
****
8. புறாக்கினிலேறி முகத்தஸிற்கு
போகும் வழியில் மூஸா-தன்
கபுறடியில் தொழுதமை கண்டு
களித்தே தொடர்ந்தனர் பயணத்தை
****
9. சுலைமான் தந்த புனித இல்லம்
சூழவும் கண்டார் நபிகள் பலரும்
தலைமை இமாமும் அவரேயானார்
தொழுகை நடாத்தி சிறந்தனரே
****
10. ஆதம் நபியாம் முதலாம் வானில்
ஈஸா யஹ்யா இரண்டாம் வானில்
அழகிய யூசுப் மூன்றாம் வானில்
இத்ரீஸ் அலைஹியும் நான்காம் வானில்
****
11. ஐந்தாம் வானில் ஹாறூனும்
ஆறாவதாக மூஸா நபியும்
ஏழாம் வானில் நபி இபுறாஹீமும்
அண்ணாலாருக்கு முகமன் கூற
****
12. ஸலாங்கள் கூறி வரவேற்று
சங்கை நபிகள் வானங்களேழில்
அலைஹிஸ்ஸலாம்கள் அனைவருமே
அண்ணல் நபியை ஏற்றனரே
****
13. தங்க வண்ண பூச்சிகளும்
தரத்தில் உயர்ந்த பழரகங்கள்
எங்கும் நிறைந்த முந்தஹாவாம்
ஏழாம் வானில் நின்றதுவே
****
14. நாளும் எழுபதினாயிரமாம்
நுழையும் மலக்குகளனைவருமே
மீளனுழையா அதிசயமாம்
மஃமூர் பள்ளி சென்றனரே
****
15. மாந்தரேங்கும் சொர்க்கத்து வாசல்
மண்ணின் வாசனை கஸ்தூரியாமாம்
ஏந்தல் நபிகள் நுகர்ந்துணர்ந்தே
எமக்குமறிய தந்தனரே
****
16. இறையை நெருங்க தொழும் வழியாம்
இறைஞ்சும் உம்மத் நமக்காக
மறையை தந்த பேரரசன்
மன்றம் சென்று பெற்றனரே
****
17. ஐம்பது அதிகம் உம் உம்மத்
ஐயம் சொன்னார் மூஸாவும்
ஐந்தே போதும் என்று மனம்
அன்னார் திருப்தி கொண்டனரே
****
18. சான்றுகளெதெற்கு நம்பிவிட
சத்தியதூதரின் வார்த்தைகளெமற்கு
தோன்றிய வர்த்தக கூடமொன்று
தோதான சான்றாயிருந்ததுவே
****
19. தூற்றிய தீயோர் முன்னாலே
துளியேயளவும் ஐயமில்லை
ஏற்றனர் தோழர் அபூபக்கர்
ஏந்தினார் 'சித்தீக்' கிரீடமல்லோ
****
20. நபியிபுறாஹீமின் மையங்கள்
இரண்டாம் முகத்தஸ், கஃபாவும்
நபி முஹமதுவிற்குரித்தே குறித்து
நற்செய்தி சொன்னது "மிஃராஜே"
No comments:
Post a Comment