உம்மவுக்கு ஆபத்தாம்
ஊரறிய பிரச்சாரம்
சும்மா கிடந்த சங்கை கூதி
சூர் என பூ சுத்துகிறார்
அண்டையான் செய்த சூனியமாம்
எண்டயான் என்றைக்கும் தீர்க்காத சதி
தொண்டயில தொக்கி நிக்காம் உம்மவுக்கு
தொண்டர் படை புனைகிறார் செய்தி
ஐசீயில் இருந்த உம்மா
அடுத்த வாட்டுக்கு வந்திருக்காம்
நைசாக கதை வளர்க்கார்
நாளைய வாக்கை எண்ணி
பிணக்கு பிணி இணக்கும்
வைத்தியராம் புரக்டர் மாரு
இணக்கம் வந்து விட்டால்
உழைப்புக்கு வழியேது புரட்டருக்கு
சங்கூதும் நாளுக்காக
சந்ததியார் காத்திருக்கார்
வோட்டுக்கு வந்திராதிங்க
வார்த்தைகள் வாய் நிறய
கட்டிலில் படுக்க வெச்சி
கதவயிம் பூட்டி வெச்சி
கயவராளும் நிலமையாச்சி
#கல்மனத்தாய் நிலைக்கட்டும் உன் மூச்சி
No comments:
Post a Comment