Shared with Publ
கன்னியும் காவலனும்
"""""""""""""""""""""""""""""
கனநாளா காத்திருக்காள் கன்னி
கலியாண கனவுகளுடன்
காளையரின்
காதல் தூதும்
கலியாண யோசனையும்
கலைந்து போக
காடையரின்
கல்லெறியும் பொல்லடியும்
மஹரோடு மணவாளர் மலிந்திருக்க
கைநிறைய சீதனத்தை கறந்தெடுத்து
கல்லாக குந்திரிக்கான் காவலுக்கு
காலாகாலமா
சீர்சிறப்பும் செப்பும்
மணநாளும் குறித்திருப்பார்
சீசனுக்கு
சில நாளில்
கும்பகர்ணம் மீளவரும்
சீசனும் முடிந்திருக்கும்
பக்கத்து ஊராரின்
பரிதாபங்களுக்கும்
கர்ச்சிக்கும் காவல் ஜீவன்
உறங்கு நிலை உறவினரோ
செய்வதறியா
No comments:
Post a Comment